அடுத்த மின் கட்டண திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தற்போது மழை பெய்து வருவதால் நீர்மின் உற்பத்தி அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.
தொடர் மழை காரணமாக மின்சார கட்டணத்தில் நிவாரணத்தை வழங்க முடியும் என மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.
தற்போது தேசிய மின் உற்பத்தியில் 52 வீதம் நீரால் உற்பத்தி செய்யப்படுவதாகவும், மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.