ஜனாதிபதியின் வரவு-செலவுத் திட்ட உரை பௌத்த மதத்தை அவமதிக்கும் செயலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
2024 வரவுசெலவுத் திட்ட அறிவிப்பிக்கு பின்னர் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
மக்கள் மீது கவனம் செலுத்தாமல் மக்களிடம் ஆணையைப் பெற்று சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தின் வருமான இலக்குகளை அடைவதற்காக கொண்டுவரப்பட்ட வரவு செலவுத் திட்டம் இது.
நாட்டு மக்களை ஏமாற்றிய வரவு செலவுத் திட்டம் இது.
மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்ப இந்த வரவுசெலவுத் திட்டத்தில் என்னென்ன விடயங்கள் உள்ளன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.