Saturday, December 13, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச ஊழியர்களின் கொடுப்பனவு 10,000 ரூபாவால் அதிகரிப்பு

அரச ஊழியர்களின் கொடுப்பனவு 10,000 ரூபாவால் அதிகரிப்பு

ஓய்வூதியம் பெறுவோரின் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 2500 ரூபாவால் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 10,000 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களின் சுமை மக்கள் மீது சுமத்தப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட உரையின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன், விருப்பத்திற்கு ஏற்ப சம்பளத்தை அதிகரிக்க முடியாது எனவும், அவ்வாறு சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles