பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்படும் மதிய உணவுக்கான பணத்தை பயன்படுத்தி அதிபர் ஒருவர் விருந்துபசாரம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.
வட மத்திய மாகாணத்தைச் சேர்ந்த பாடசாலையொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த அதிபர், மாணவர்களுக்கு அன்றைய தினம் வீட்டில் இருந்தே உணவை எடுத்து வருமாறு பணிப்புரை விடுத்துள்ளதுடன், இந்த அதிபரிடம் ஏற்கனவே விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண உதவிப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.