Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதோல்வியை தழுவிய இலங்கை அணி நாட்டை வந்தடைந்தது

தோல்வியை தழுவிய இலங்கை அணி நாட்டை வந்தடைந்தது

இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்விக்கு பின்னணியில் ஒரு குறிப்பிட்ட குழுவினர் இருந்ததாகவும் அவர்களின் சதித் திட்டத்தால் இந்த சோகமான தோல்வி ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழு தலைவர் பிரமோதய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் ஆரம்ப சுற்றுப் போட்டிகளில் தோல்வியடைந்த இலங்கை அணி இன்று காலை நாட்டை வந்தடைந்தது,

இலங்கை கிரிக்கெட்டை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர உறுதி பூண்டுள்ளதாகவும், இது தொடர்பான அனைத்து உண்மைகளையும் இரண்டு நாட்களில் பொது ஊடகங்களில் அறிவித்து இலங்கை மக்களுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணி வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-174 இன்று காலை 05.05 மணியளவில் இந்தியாவின் பெங்களூரில் இருந்து நாட்டை வந்தடைந்தது.

அவர்களை வரவேற்க இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் அதிகாரிகள் குழு ஒன்று கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் கூடியது.

இந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் இலங்கை கிரிக்கெட் அணி படுதோல்வியை தழுவியது.

9 போட்டிகளில் 7ல் இலங்கை அணி தோல்வியடைந்தது.

நடப்பு உலக சாம்பியனான இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும், நெதர்லாந்துக்கு எதிரான போட்டியிலும் மட்டுமே இலங்கை அணி வெற்றி பெற்றது.

நேற்று நடைபெற்ற கடைசிப் போட்டியில் நியூசிலாந்திடம் 5 விக்கெட்டுக்களில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 9வது இடத்துக்குச் சென்றது.

இதன்படி எதிர்வரும் சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான இலங்கை அணி தகுதி பெறுமா என்பது நிச்சயமற்ற நிலையில் உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles