Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇஸ்ரேலில் உயிரிழந்த இலங்கையரின் குடும்பத்துக்கு இழப்பீடு

இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கையரின் குடும்பத்துக்கு இழப்பீடு

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் உயிரிழந்த சுஜித் பண்டாரவின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு இஸ்ரேல் அரசாங்கம் வழங்கி வரும் அனைத்து இழப்பீடுகள் மற்றும் கொடுப்பனவுகளை சுஜித் பண்டாரவுக்கும் பெற்றுக் கொடுப்பதற்கு பணியகம் ஏற்கனவே தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வென்னப்புவ பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சுஜித் பண்டார யடவர 2018 ஆம் ஆண்டு உதவியாளர் பணிக்காக இஸ்ரேலுக்கு சென்றுள்ளார்.

ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த சுஜித் பண்டார யடவரவின் உடல் நேற்று காலை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles