சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி), உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்தியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்றைய தினம் கூடிய போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் நிர்வாக நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் தலையீடு காணப்படுவதனால் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமை நீக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது