நிதித்துறையின் பாதுகாப்பு வலயத்தை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ், இலங்கைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கியின் நிறைவேற்று சபை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை வைப்புத்தொகை காப்புறுதித் திட்டத்தை மையமாக வைத்து இலங்கையில் நிதித்துறையின் பாதுகாப்பு வலயத்தின் நிதி மற்றும் நிறுவனத் திறனை வலுப்படுத்துவதற்காக இந்தத் தொகை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.