45 சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்குருவாந்தோட்டை பிரதேசத்தில் உள்ள ஆலயம் ஒன்றின் வளாகத்தில் குறித்த போத்தல்களை குழி தோண்டி புதைத்து மறைத்து வைத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் 65 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் விகாரைக்கு அருக்கில் வசித்து வருபவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர் நீண்டகாலமாக இந்த நடவடிக்கையை முன்னெடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், சந்தேகநபர் நேற்று (08) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.