Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொது போக்குவரத்து சேவைகளுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்

பொது போக்குவரத்து சேவைகளுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்

பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான வாகன இறக்குமதியும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

பொதுப் போக்குவரத்துக்காக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட ஒரு மாத கால அவகாசமும் நிறைவடைந்துள்ளது.

இதன்படி இனி எந்த வாகனத்தையும் இறக்குமதி செய்ய அனுமதி இல்லை.

வாகன இறக்குமதி தொடர்பான அறிக்கையை தயாரிப்பதற்காக ஜனாதிபதி செயலகம் விசேட குழுவொன்றை நியமித்துள்ளது.

வாகனங்களின் தேவை, எரிபொருள் செலவு, வாகன இறக்குமதிக்கான பரிவர்த்தனை தொகை போன்றவற்றில் விசேட கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles