கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொனஹேன விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படிஇ உடனடியாக செயற்பட்ட விசேட அதிரடிப்படை அதிகாரிகள்இ நீர்கொழும்பு கல்கந்த சந்தியில் இருந்து மினுவாங்கொடை நோக்கி சுமார் 100 மீற்றர் தொலைவில் வைத்து சந்தேக நபைர கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட போது, அவரிடம் இருந்து 107 கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.
கடியால – தெமன்ஹந்திய பிரதேசத்தில் வைத்து இந்த போதைப்பொருளை விற்பனைக்காக கொண்டு சென்ற போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் 38 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளதுடன் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.