Saturday, April 19, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொரிய பிரதமரை சந்தித்தார் சபாநாயகர்

கொரிய பிரதமரை சந்தித்தார் சபாநாயகர்

கொரிய சர்வதேச ஏஜென்சி (KOICA) ஆதரிக்கும் நாடுகளில் இலங்கைக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று கொரிய பிரதமர் ஹான் டக்-சூ தெரிவித்துள்ளார்.

கொரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுடன் கொரியாவின் தலைநகர் சியோலில் நேற்று (06) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலில், கொரியாவில் பணியாற்றுவதற்குத் தேவையான அதிநவீன தொழில்நுட்பம் எதிர்காலத்தில் இலங்கை தொழிலாளர்களுக்கு கொரிய நிறுவனமொன்றின் ஊடாக வழங்கப்படும் என உத்தரவாதம் வழங்க அந்நாட்டு பிரதமர் நடவடிக்கை எடுத்தார்.

இலங்கையில் கொரிய முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும் பொருளாதார கூட்டு ஆணைக்குழுவை உருவாக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles