அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கொட் நேதன் இன்றைய தினம் இலங்கை வரவுள்ளார்.
கொழும்பு துறைமுகத்தில் ஒரு புதிய முதலீட்டுக்கான நிகழ்வில் பங்கேற்பதற்காக அவர் நாட்டிற்கு வரவுள்ளதாக, கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் இலங்கை வரவுள்ள அவர் நாளை வரை நாட்டில் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஸ்கொட் நேதன் நாட்டின் உயர்மட்ட வர்த்தக மற்றும் அபிவிருத்தி வங்கிகளின் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார்.
மேலும் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடனும் அவர் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.