விவசாயிகளுக்கு உரம் கொள்வனவு செய்வதற்கு தேவையான கொடுப்பனவு இன்று (06) முதல் அவர்களது கணக்குகளில் வரவு வைக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னதாக வவுச்சர் வழங்கி விவசாயிகளுக்கு உரம் வழங்கப்பட்டதாகவும், இம்முறை உரம் கொள்வனவு செய்வதற்கு பணம் வழங்க தீர்மானிக்கப்பட்டதாகவும் விவசாய அமைச்சர் குறிப்பிட்டார்.