கொழும்பு, பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள கரையோர வீதி மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பயணிகள் மேம்பாலத்தின் புனரமைப்பு பணிகள் காரணமாக இன்று முதல் குறித்த வீதி மூடப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனவே குறித்த வீதியூடாக பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் மேலும் அறிவுறுத்தியுள்ளனர்.