Friday, October 31, 2025
25 C
Colombo
மலையகம்பதுளையில் ஐஸுடன் ஒருவர் கைது

பதுளையில் ஐஸுடன் ஒருவர் கைது

பதுளையில் ஐஸ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பதுளை பல்லேகெலே பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த ஐஸ் ரக போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது 6 கிராம் 600 மில்லிகிராம் நிறையுடைய ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதானவரை இன்று பதுளை நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பதுளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பதுளை பல்லேகெலே பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles