செய்திகள்உள்நாட்டுகொழும்பு தீ விபத்தில் படுகாயமடைந்த யுவதி உயிரிழப்பு

கொழும்பு தீ விபத்தில் படுகாயமடைந்த யுவதி உயிரிழப்பு

கொழும்பு – புறக்கோட்டை 2ம் குறுக்குதெரு பகுதியிலுள்ள ஆடையகமொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் காயமடைந்த யுவதி உயிரிழந்துள்ளார்.

கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்ற இந்த தீ விபத்தில் சுமார் 20இற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் 11 பெண்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையிலேயே மேற்படி யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வட்டகொட கீழ்ப் பிரிவைச் சேர்ந்த யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles