Tuesday, December 23, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு

மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு

மாரவில தெமட்டபிட்டிய ஆரம்ப பாடசாலைக்கு அருகில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் நிர்வாண சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இன்று (31) காலை கிடைத்த தொலைபேசி அழைப்பை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த நிர்வாண சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

மர்மமான முறையில் உயிரிழந்தவர் வென்னப்புவ – மேற்கு தும்மலதெனிய பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

தச்சு தொழிலாளியான இந்த நபர் கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் இருந்த இடத்தை ஒட்டியுள்ள தேவாலய மைதானத்தில் உள்ள சுவரில் பெண்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள் மற்றும் சில ஆடைகளை பொலிஸார் கண்டெடுத்ததாக கூறப்படுகிறது.

மோட்டார் சைக்கிள் மற்றும் ஆடைகள் உயிரிழந்த நபருடையது என நம்புவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவரின் தலையில் இருந்தும் ரத்தம் காணப்பட்டதால், மரணம் குறித்து நீதவான் விசாரணை நடத்த போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles