மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களிலும் குருணாகல் மாவட்டத்திலும் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் வட மாகாணத்திலும் புத்தளம் மாவட்டத்திலும் காலை வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.