Sunday, May 11, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகிணற்றுக்குள் விழுந்த 4 காட்டு யானைகள் பாதுகாப்பாக மீட்பு

கிணற்றுக்குள் விழுந்த 4 காட்டு யானைகள் பாதுகாப்பாக மீட்பு

ரிட்டிகல பகுதியில் விவசாய கிணற்றுக்குள் விழுந்த 4 காட்டு யானைகள் பல மணிநேர போராட்டத்தின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டன.

ரிட்டிகல – கனேவல்பொல – மொரகொட மற்றும் அலகொல்லேவ வனஜீவராசிகள் காரியாலங்களின் அதிகாரிகள் இணைந்து குறித்த யானைகளை மீட்டுள்ளனர்.

இரண்டு தாய் யானைகளும், இரண்டு குட்டிகளுமே இவ்வாறு கிணற்றில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட 4 யானைகளும் பின்னர் கும்புக்வெவ வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டதாக வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

உணவு தேடி ஊருக்குள் பிரவேசித்த யானைகளே இவ்வாறு பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles