இந்தியா – ஆந்திர மாநிலம் – விசாகப்பட்டிணத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 29 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.