Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநெல் களஞ்சியசாலை காப்பாளர்கள் நால்வர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

நெல் களஞ்சியசாலை காப்பாளர்கள் நால்வர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகளில் இருந்த நெல் தொகை திருடப்பட்டமை தொடர்பில் நான்கு களஞ்சியசாலை காப்பாளர்கள் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

நிக்கவெரட்டிய, மஹவ மற்றும் ஆனமடுவ ஆகிய பிரதேசங்களில் உள்ள நெல் களஞ்சியசாலைகளின் காப்பாளர்கள் நால்வரே சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொட தெரிவித்துள்ளார்.

நெல் களஞ்சியசாலைகளில் இருந்து 700 இலட்சம் ரூபா பெறுமதியான நெல் கையிருப்பு காணாமல் போயுள்ளது என நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மொத்த கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles