Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுவைத்திலிருந்து 28 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

குவைத்திலிருந்து 28 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 28 இலங்கையர்கள் இன்று குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்கள் இலங்கைக்கு வருவதற்காக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்த ஒரு குழுவாகும்.

இந்தக் குழுவினர் இன்று (27) காலை 6.30 மணியளவில் குவைத்தில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-230 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அவர்களில் 24 பெண்களும் 04 ஆண்களும் இருந்தனர்.

வந்தவர்களில் பெரும்பாலானோர் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களை சேர்ந்தவர்களாவர்.

Keep exploring...

Related Articles