2023 ஆம் ஆண்டில், இலங்கையில் சுமார் 400 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவற்றில் சுமார் 200 இறப்புகள் யானை-மனித மோதல்களாலும், துப்பாக்கிச் சூடு அல்லது மோட்டார் விபத்துகளாலும், மீதமுள்ள இறப்புகள் நோய்களால் ஏற்பட்டவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் உள்ள யானைகளின் எண்ணிக்கை சுமார் 6,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.