க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு நவம்பர் மாத இறுதிக்குள் வெளியாகும் எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெறுபேறுகளை கணனி மயமாக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் கடந்த மே 29 முதல் ஜூன் 08 வரை நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.