வன விலங்குகளினால் ஏற்படும் பயிர் சேதங்களை தடுக்கும் வகையில் விவசாயிகளுக்கு வாயு துப்பாக்கிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
அங்குனுகொலபெலஸ்ஸவில் இடம்பெற்ற நிகழ்வில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால், விவசாயிகளுக்கு 268 வாயு துப்பாக்கிகள் வழங்கி வைக்கப்பட்டன.
வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்கள் அதிகரித்துள்ளது.
குரங்கு, மயில், மர அணில் போன்ற விலங்குகளினால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வனவிலங்குகளினால் ஏற்படும் பயிர் சேதங்களை தடுக்கும் வகையில் விவசாயிகளுக்கு வாயு துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.