விசேட அதிரடிப்படை கதிர்காமம் முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், திஸ்ஸமஹாராம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெபரவெவ குளத்திற்கு அருகில் நேற்று (18) விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவினால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
அதன்போது, 5 போலி 1,000 ரூபா நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெபரவெவஇ கெமுனுபுர வீதியில் வசிக்கும் 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மேலதிக விசாரணைகளுக்காக திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.