Friday, August 29, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் நீடிப்பு

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் நீடிப்பு

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும் 03 வாரங்கள் சேவை நீடிப்பு வழங்குவதற்கான தீர்மானத்தை அங்கீகரிப்பதில்லை என நேற்று (17) கூடிய அரசியலமைப்பு சபை தீர்மானித்திருந்தது.

எவ்வாறாயினும், அரசியலமைப்பு சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மாற்றி பொலிஸ் மா அதிபரை மீண்டும் பணியில் அமர்த்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பொலிஸ் மா அதிபரை மீண்டும் நியமிப்பது தொடர்பான ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான அனைத்து உத்தரவுகளையும் சீனாவின் பீஜிங்கில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பதவிக்காலம் முடிவடைந்த பொலிஸ் மா அதிபர் சி. டி.விக்ரமரத்னவின் சேவையை மேலும் மூன்று வாரங்களுக்கு நீடிக்க முன்னதாக ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles