Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிரான்ஸுக்குள் பிரவேசிக்க முயன்ற இலங்கையர் சடலமாக மீட்பு

பிரான்ஸுக்குள் பிரவேசிக்க முயன்ற இலங்கையர் சடலமாக மீட்பு

சட்டவிரோதமான முறையில் பிரான்ஸ் செல்ல முற்பட்ட இலங்கையர் ஒருவர் பெலாரஸ் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சட்டவிரோத முகவர் ஒருவரின் உதவியுடன், பிரான்ஸ் செல்லும் நோக்கில் அவர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் விமானம் மூலம் ரஷ்யா சென்று அங்கிருந்து பெலாரஸ், போலந்து, ஜேர்மன் ஊடாக பிரான்ஸ் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், பெலாரஸ் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Keep exploring...

Related Articles