Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅனுராதபுரத்தில் சாரதி அனுமதிப்பத்திர விநியோகம் இடைநிறுத்தம்

அனுராதபுரத்தில் சாரதி அனுமதிப்பத்திர விநியோகம் இடைநிறுத்தம்

இன்று (16) மற்றும் நாளை (17) அனுராதபுரம் மாவட்ட காரியாலயத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அலுவலகத்தில் அவசர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்றும், நாளையும் அந்த அலுவலகத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அன்றைய தினம் நேரம் ஒதுக்கிய வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் மற்றுமொரு நாளில் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Keep exploring...

Related Articles