Sunday, June 8, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டு3,000 விவசாயிகளுக்கு உரம் வழங்க நடவடிக்கை

3,000 விவசாயிகளுக்கு உரம் வழங்க நடவடிக்கை

இம்முறை பெரும்போகத்தில் 3 மாவட்டங்களில் மரக்கறி மற்றும் ஏனைய பயிர்களை செய்கையிடும் 3000 விவசாயிகளுக்கு உரங்களை வழங்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

விவசாயி ஒருவருக்கு 20,000 ரூபா பெறுமதியான உரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்கான நிதியுதவி தனியார் நிறுவனமொன்றினால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டம் மாத்தளை, குருணாகல், மொனராகலை மாவட்டங்களில் அமுல்படுத்தப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles