Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதுப்பாக்கிச்சூட்டில் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர் பலி

துப்பாக்கிச்சூட்டில் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர் பலி

மீட்டியாகொட பகுதியில் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த நபரொருவருக்கும், பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில், பாதாள உலக குழுவைச் சேர்ந்தவர் என்று நம்பப்படும் 42 வயதுடைய நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் காலி, கரகொட பகுதியில் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்திருந்தார்.

அந்த கொலை சம்பவத்துடன், மேற்கண்ட நபருக்கு தொடர்புள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles