சமிக்ஞை கோளாறு காரணமாக பிரதானமான மார்க்கமூடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கனேமுல்ல – பல்லேவல ரயில் நிலையங்களுக்கு இடையில் இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதனால் இன்று காலை பிரதானமான மார்க்கமூடான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், சேவைகளை மீட்டெடுக்க விரைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.