கொழும்பில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் கண் நோய் வேகமாக பரவி வருவதாக வலயக் கல்வி அலுவலகம் எச்சரித்துள்ளது.
கண் நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருந்தால், உடனடியாக பாடசாலை மருத்துவ அலுவலர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து பரிந்துரைகளை பெறுமாறு அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பாடசாலையில் கண் நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தி வைக்குமாறு வட்டாரக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயத்தின் 6ம், 7ம், 8ம் தர மாணவர்களின் கண் நோய் காரணமாகவே அதிபர்களுக்கு இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.