பண்டாரவளை – தூல்கொல்ல பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் உணவு ஒவ்வாமை காரணமாக
30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர்கள் பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலையில் இன்று காலை வழங்கப்பட்ட உணவு விஷமடைந்ததன் காரணமாக குறித்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.