வவுனியா, வெளிக்குளம் பகுதியில் நேற்று (09) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
மழை பெய்யும் போது பயணித்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஜீப், வீதியில் நின்றிருந்த மாடுகள் மீது மோதியதுடன் வீதிக்கு அருகாமையில் இருந்த சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, மதுகந்தவில் அமைந்துள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் இரு இராணுவத்தினர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்த ஏனைய ஆறு பேரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



