Wednesday, December 17, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீரற்ற காலநிலை காரணமாக 71,320 பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக 71,320 பேர் பாதிப்பு

இலங்கையில் பல மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 18,898 குடும்பங்களைச் சேர்ந்த 71,320 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, களுத்துறை, கம்பஹா, மாத்தறை, காலி, நுவரெலியா, புத்தளம், குருநாகல், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 555 குடும்பங்களைச் சேர்ந்த 1,910 பேர் 16 தங்குமிடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அனர்த்தம் காரணமாக 12 வீடுகள் முழுமையாகவும், 1,004 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles