Sunday, July 20, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீரற்ற காலநிலை: டெங்கு பரவும் அபாயம்

சீரற்ற காலநிலை: டெங்கு பரவும் அபாயம்

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு பரவும் அபாயம் காணப்படுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மக்கள் கவனம் செலுத்துவது முக்கியம் என அதன் பணிப்பாளர் கலாநிதி நளின் ஆரியரத்ன தெரிவித்தார்.

பல இடங்களில் மழைநீர் தேங்கி இருப்பதால் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகிறது எனவும், அதனால் எதிர்காலத்தில் தொற்று நோய் ஏற்படும் சூழ்நிலை உருவாகலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக இந்நாட்களில் காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் இரத்தப் பரிசோதனை செய்வது அவசியமானது என தெரிவிக்கப்படுகிறது.

இந்த வருடத்தில் இதுவரை 38 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles