Sunday, August 10, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயிர் அச்சுறுத்தல்: பதவி விலகினார் முல்லைத்தீவு மாவட்ட நீதவான்

உயிர் அச்சுறுத்தல்: பதவி விலகினார் முல்லைத்தீவு மாவட்ட நீதவான்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி.சரவணராஜா பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

‘உயிர் அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் காரணமாக’ இவர் பதவி விலகுவதாக கடிதம் ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.

கடந்த 23ம் திகதி குறித்த கடிதத்தை அவர், நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து தமக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தாம் வகித்து வந்த அனைத்தையும் நீதவான் பொறுப்புகளில் இருந்தும் விலக தீர்மானித்ததாக அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles