காங்கேசந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு அஞ்சல் ரயிலில் காட்டு யானைகள் கூட்டம் மோதியதில் நான்கு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.
நேற்று (27) காலை 11.50 மணியளவில் கல்கமுவ நகருக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் ரயிலின் என்ஜினின் ஒரு பகுதியும் சேதமடைந்ததுடன், ரயில் சுமார் ஒரு மணித்தியால தாமதத்தின் பின்னர் கொழும்பு நோக்கி பயணிக்க ஆரம்பித்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த யானைகள் தொடர்பில் கல்கமுவ யானை கட்டுப்பாட்டு பிரிவுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.