Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாரடைப்பினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு

மாரடைப்பினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு

மாரடைப்பினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்களுக்கான இயக்குநரகத்தின் சமூக மருத்துவ நிபுணர் ஷெரீன் பாலசிங்கம் தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டில் அரசாங்க வைத்தியசாலைகளில் உயிரிழந்தவர்களில் 52 வீதமானவர்கள் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Keep exploring...

Related Articles