Wednesday, October 22, 2025
29 C
Colombo
செய்திகள்உலகம்மன்னிப்பு கோரினார் கனடா பிரதமர்

மன்னிப்பு கோரினார் கனடா பிரதமர்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்நாட்டு நாடாளுமன்றம், யுக்ரைன் ஜனாதிபதி மற்றும் யூதர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இரண்டாம் உலகப் போரில் நாஜி இராணுவப் படைப்பிரிவில் இணைந்து, ரஷ்ய இராணுவத்துக்கு எதிராகப் போராடிய போர் வீரன் என்று கூறி நாடாளுமன்றத்துக்கு அழைத்து வந்த யுக்ரைன் பிரஜையை கௌரவித்த சம்பவம் தொடர்பில் கனடா பிரதமர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இரண்டாம் உலகப் போரில் யூத இனப்படுகொலையில் ஈடுபட்ட மனிதாபிமானமற்ற கொலைகாரனை போர் வீரனாக்கியதற்காக வெட்கப்பட்டு, உண்மை தெரியாமல் யாரோஸ்லாவ் ஹன்காவை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வந்தது வெட்கக்கேடானது என கனடா நாட்டு மக்களிடம் பிரதமர் ட்ரூடோ மன்னிப்பு கோரியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles