அடுத்த மூன்று முதல் 24 மணித்தியாலங்களில் கொட்டாபொல, பிடபெத்தர, பஸ்கொட அக்குரெஸ்ஸ, மாலிம்பட, அதுரலிய, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவ்நுவராயன ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.
நில்வலவை ஆற்றின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் கணிசமான மழை பெய்துள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் வசிப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.