தெஹிவளை – பஞ்சலோக மாவத்தையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரு கிலோ 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் ஈட்டியதாக கருதப்படும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.