Sunday, June 28, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதயாசிறியின் தடை உத்தரவு இடைநிறுத்தம்

தயாசிறியின் தடை உத்தரவு இடைநிறுத்தம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகரவிடம் விளக்கம் கோரி கட்சியின் தலைவர் பிறப்பித்த தடை உத்தரவை இடைநிறுத்துமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (26) உத்தரவிட்டுள்ளது.

தயாசிறி ஜயசேகர சமர்ப்பித்த முறைப்பாட்டை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான இந்த தடை உத்தரவை ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி வரையில் அமுல்படுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், தயாசிறி ஜயசேகரவுக்கு அவ்வாறானதொரு கடிதத்தை வழங்குவதற்கு கட்சியின் மத்திய குழுவுக்கு அதிகாரம் உள்ளதாக மைத்ரிபால சிறிசேன சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி பைசர் முஸ்தபா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles