செய்திகள்உள்நாட்டுமட்டக்களப்பு பல்கலைக்கழகம் ஹிஸ்புல்லாவிடம் மீண்டும் கையளிப்பு

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் ஹிஸ்புல்லாவிடம் மீண்டும் கையளிப்பு

பெட்டிகலோ தனியார் பல்லைக்கழகம் மீண்டும் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவிடமே கையளிக்கப்பட்டுள்ளது.

சுமார் நான்கு வருட காலமாக பெட்டிகலோ தனியார் பல்கலைக்கழகம் அரசாங்க மற்றும் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்தது.

ஏப்ரல் 21 தாக்குதலுடன் குறித்த பல்கலைக்கழகம் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டது.

இதனையடுத்து, கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நிலையமாக மாற்றப்பட்டது.

சர்சைக்குரிய பெட்டிகலோ தனியார் பல்கலைக்கழகம் 800 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு சவூதி அரேபியாவில் உள்ள வர்த்தகர் ஒருவரினால் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவிற்கு அன்பளிப்பு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவித்திருந்தன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles