Tuesday, July 29, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறுமியின் சடலத்தை தேடி தருபவருக்கு 20 இலட்சம் ரூபா

சிறுமியின் சடலத்தை தேடி தருபவருக்கு 20 இலட்சம் ரூபா

2 வயது சிறுமியின் சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாக அண்மையில் செய்தி வெளியாகியிருந்தது.

குறித்த சடலத்தை கண்டுபிடிக்கும் நபருக்கு 20 இலட்சம் ரூபாவை வழங்குவதாகவும் உயிரிழந்த சிறுமியின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி நெல்லுக்குளம் பொது மயானத்தில் புதைக்கப்பட்ட சடலம், செப்டெம்பர் 5ஆம் திகதி சில குழுவினரால் எடுத்துச் செல்லப்பட்டதாக சிறுமியின் உறவினர்கள் நெல்லுக்குளம் மற்றும் வவுனியா பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சிறுமியின் சடலம் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்காத நிலையில், தனது மகளின் சடலத்தை கண்டெடுக்கும் நபருக்கு 20 இலட்சம் ரூபாவை வழங்குவதாக சிறுமியின் பாட்டி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles