Wednesday, December 24, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதன் மீதான தாக்குதல் தொடர்பில் கருத்து வெளியிட்டார் உத்திக எம்.பி

தன் மீதான தாக்குதல் தொடர்பில் கருத்து வெளியிட்டார் உத்திக எம்.பி

நாட்டில் தற்போதுள்ள முறைமை காரணமாகதான் தன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

தான் பயணித்த கார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இன்று (19) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,

‘இந்தச் சம்பவத்தை யார் செய்தார்கள் என்பதை விட, தற்போதுள்ள முறைமையினால்தான் தாக்குதல் நடத்தப்பட்டது என்று நான் நினைக்கிறேன். இந்த முறை தவறு என்று நாம் அனைவரும் அறிவோம். இந்த முறை தவறு என்பது நம் நாட்டு மக்களுக்கும் தெரியும். நமது நாட்டின் சமூக அமைப்பு தவறு. அரசியலும் தவறு. அதனால்தான் நாடு இன்று இந்த நிலைக்கு வந்துள்ளது என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles