Saturday, June 14, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇளைஞனின் மரணத்துக்கு தாம் பொறுப்பென்றால் பதவி விலக தயார் - பந்துல குணவர்தன

இளைஞனின் மரணத்துக்கு தாம் பொறுப்பென்றால் பதவி விலக தயார் – பந்துல குணவர்தன

நேற்று (12) காலை ஹொரபே ரயில் நிலையத்தில் தவறி விழுந்து உயிரிழந்த இளைஞரின் மரணத்திற்கு தாம் பொறுப்பென்றால், அமைச்சர் பதவியை தாம் இராஜினாமா செய்யவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த இளைஞனின் மரணத்திற்கு தாம் பொறுப்பானால் உடனடியாக பதவி விலகுவேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத வேலைநிறுத்தத்திற்கு தலைமை தாங்கி ஒரு இளைஞனின் உயிரிழப்பை ஏற்படுத்திய அனைத்து தரப்பினரும் அதற்கு பொறுப்பானவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles