இலங்கை சுங்கப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 965 கொள்கலன்கள் பரிசோதனை தாமதம் காரணமாக துறைமுக முனையங்களிலும், சுங்க பரீட்சை பிரிவுகளிலும் சிக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுங்க விசாரணை நடைமுறைக்கு நீண்ட காலம் எடுப்பதால் இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.